ஆப்பிரிக்கா- இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!
தென்னாப்ரிக்கா-இங்கிலாந்து இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர், இரு அணி வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இருக்க வேண்டிய தொடர், தென்னாப்ரிக்க வீரர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த, இரு அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதியானது.
இதையடுத்து ஒருநாள் தொடர் தேதி குறிப்பிடப்படமால் ஒத்திவைக்கப்படுவதாக, இரு நாட்டு தரப்பிலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
No comments